என் மலர்
உள்ளூர் செய்திகள்

தச்சை கணேசராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை யில் இன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, நிர்வாகிகள் வக்கீல் ஜெயபாலன், பெரியபெருமாள், பால்கண்ணன், மாவட்ட மகளிரணி ஜான்சிராணி, சிவந்தி மகாராஜன், ஆவரை பால்துரை, எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் உவரி ராஜன்கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் அன்பு அங்கப்பன், சீனிமுகம்மது சேட், பாறையடி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






