search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் தூக்கு போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
    X

    காரைக்காலில் தூக்கு போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

    • காரைக்காலில் தூக்கு போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • பணம் செலவானதால், மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி மேல ஓடுதுறையைச்சேர்ந்தவர் செந்தில் சீதாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு நர்மதா(வயது19), கீர்த்தனா(17), யுவராஜ்(15) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில், நர்மதா, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனை பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த 15ந் தேதி, வழக்கம் போல், செல்போன் பார்த்து கொண்டிருந்த மகளை, எப்போதும் செல்போனை பார்த்துகொண்டிருக்காதே. கொஞ்சம் நேரம் படி என தாய் கண்டித்தார். தொடர்ந்து, வீட்டு அறைக்கு சென்ற நர்மதா, நயிலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    எதார்த்தமாக மகளின் அறைக்கு சென்ற தாய் கீதா லட்சுமி, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து, சத்தம் போட்டார். ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை தூக்கிலிருந்து காப்பாற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சைக்கு அதிகம் பணம் செலவானதால், மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நர்மதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, நிரவி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×