என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது
- மாணவரிடமிருந்து 195 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- வடிவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கோவை,
பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி எதிரே காலி இடத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ.சிவில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் முதலிபாளையம் பட்டக்காடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வடிவேலை (19) கைது செய்தனர். அவரிடம் இருந்து 195 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவரிடம் சோதனை செய்த போது அவர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பூச்சி என்ற கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






