search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு
    X

    பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிப்பு

    • துணை தேர்வு எழுத வைக்க 24-ந் தேதி சிறப்பு கூட்டம்
    • துணைத்தேர்வு குறித்த ஆலோசனை வழங்கி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ் -1, பிளஸ்- 2 மாணவர்களுக்கான பொ துத்தேர்வு நடந்து வருகிறது. இந்த பொதுத்தேர்வில் ஏராள மான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அரசு சார்பில் பொதுத்தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப் பட்டு வருகிறது.

    இந்நிலையில், நடப்பா ண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வராதவர்கள் யார்? என கண்டறியவும், தேர்வு தொடர்பான முக்கியத்துவம் மற்றும் மாண வர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்கவும் அனைத்து தேர்வர்களும் தேர்வை எழுத வைக்கவும், துணைத்தேர்வு சிறப்பு பயிற்சி மையம் ஏற்பாடு செய்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த பணிக்காக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நி லைப்பள்ளி களில் வருகிற 24-ந் தேதியும், ஏப்ரல் 10-ந் தேதியும் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்த அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவட் டத்தில் நடந்த பிளஸ் 2 மொழிப்பாடத் தேர்வினை 1,628 பேர் எழுதவில்லை. இதேபோல், பிளஸ் 1 தேர்வினை 430 பேர் எழுதவில்லை. ஆங்கில தேர்வினை 952 பேர் தேர்வு எழுதவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் விடுப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    இந்நிலை யில், தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்களை கண்டறிய சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் வருகிற 24-ந் தேதி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 24-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தின் மூலமாக அடுத்து வரும் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அனை வரையும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்யப்படவுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்து அவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தவிர, தற்போது நடந்து வரும் பிளஸ்- 2, பிளஸ் -1 பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணைத்தேர்வு குறித்த ஆலோசனை வழங்கி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×