search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் நடக்கும் அ.தி.மு.க. 52-வது தொடக்க பொதுக்கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை
    X

    கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் நடக்கும் அ.தி.மு.க. 52-வது தொடக்க பொதுக்கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை

    • வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
    • 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழகங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க. தலைமை அறிவித்தபடி வருகிற 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.

    18-ந் தேதி சூலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நான், திரைப்பட இயக்குனர், நடிகர் மனோஜ்குமார், ஜெயசீலனும், வால்பாறை யில் எம்.ஜி.ஆர் இளைஞ ரணி துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அமுல்கந்தசாமி, பி.ஏ.சுப்பி ரமணியம் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.

    26-ந் தேதி கிணத்துக் கடவு ெதாகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மாணவரணி துணைச்செயலாளர் எம்.டிபாபு, பலகுரல் வெள்ளி யங்கிரியும், 28-ந் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் கூட்டத்தில் வக்கீல் பிரிவு இணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பாபுமுருகவேல், எரியூட்டி சேகர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×