என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்னடக்கு கட்டிட பணி மார்ச் மாதத்தில் நிறைவு பெறும்
- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.
- அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.
கோவை,
கோவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பன்னடக்கு கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியுதவியுடன் தரைத்தளத்தில் சேர்ந்து 6 தளங்களை கட்டுகின்ற புதிய கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும். தீக்காயத்திற்கு என்று தனி பகுதி கட்டப்படுகிறது. 8 ஆபரேஷன் தியேட்டர்கள் மற்றும் 2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது.அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க தார் சாலைகள் அமைக்கப்படும்.
அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி, சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம்.
நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக, நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம். அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.
அதேபோல அரசு திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை செய்து திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தான் நடைபெறும்.
அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவர் அவர் கூறினார்.
பின்னர் வாலாங்குளம் புறவழிச்சாலையில் மரம் நட்டு வைத்து , உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வடகோவை -மருதமலை சாலையை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.






