என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்ட நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- அளவரை தாக்கிய முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நிமலன் கிறிஸ்டோபர் தலைமை தாக்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணை தலைவர் அசோக், பொருளாளர் வேலைமுருகன், இணைச்சசெயலாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சதிஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய முன்னாள் கவுன்சிலரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட கிளை செயலாளர் மீனாட்சி நன்றியுரையாற்றினார்.
Next Story






