என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை -மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சுருண்டு விழுந்து சாவு
- சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
- திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்
கோவை,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 63). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அங்கு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.பின்னர் கனகராஜ் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நீரிழிவு, வலிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனை கண்ட சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்