search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 17,444 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்- ராதாபுரத்தில் தொடங்கி வைத்து சபாநாயகர் பேச்சு

    • காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
    • இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    திட்டம் தொடக்கம்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர்

    அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாய கர் அப்பாவு பேசியதாவது:-

    காலை உணவு குழந்தை களின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. மேலும், காலை உணவினை தவிர்க்கும் நிலையில் உள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும் காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    காலை உணவு சாப்பிடா மல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    40 தொடக்கப் பள்ளிகள்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 22 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2,246 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் என 18 தொடக்கப்பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்க ப்பட்டு, இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து இன்று மாவட்டத்தி ற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்ப டும் 286 தொடக்க ப்பள்ளிகளில் பயிலும் 13,388 மாணவர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 2,894 மாண வர்களும், நகர்புற பகுதி களில் செயல்படும் 19 பள்ளி களில் பயிலும் 1,162 மாண வர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17,444 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.

    வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்

    வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் பெரிய உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இது போன்று அற்புதமான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×