search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.எஸ்.புரத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    ஆர்.எஸ்.புரத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

    • ஜவுளி எடுப்பதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார்.
    • பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்

    கோவை

    கோவை பி.என்.புதூர் அருகே உள்ள கோகுலம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வானதி(54). சம்பவத்தன்று இவர் ஜவுளி எடுப்பதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வாங்கிய துணிகளை காரில் வைப்பதற்காக கொண்டு சென்றார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் வானதி கழுத்தில் அணிந்து 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்

    Next Story
    ×