என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தொழிலாளியை கல்லால் தாக்கி விட்டு விபத்து நாடகமாடிய தம்பி கைது
    X

    கோவையில் தொழிலாளியை கல்லால் தாக்கி விட்டு விபத்து நாடகமாடிய தம்பி கைது

    • ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தனது அண்ணன் ஆனந்தகுமாரின் தலையில் கல்லால் தாக்கினார்.
    • இது குறித்து டாக்டர்கள் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது சகோதரர் சதீஷ்குமார் (29). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் கூலி வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் 2 பேரும் கெடிமேடு நால்ரோடு அருகே நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தனது அண்ணன் ஆனந்தகுமாரின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த சதீஷ்குமார் தனது அண்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவர் டாக்டர்களிடம் தனது அண்ணன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறி நாடகமாடினார். இது குறித்து டாக்டர்கள் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமி ராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் தனது அண்ணனை சதீஷ்குமார் தாக்கும் காட்சிகள் பதிவாக இருந்தது.

    இதனையடுத்து போலீசார் அண்ணனை தாக்கி விட்டு விபத்து நடந்ததாக நாடகமாடிய சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×