என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நீலகிரி,
பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மேஜை உள்ளே வைக்கப்பட்டு இருந்த ரூ.2,500 மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது தெரியவந்தது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமரா காட்சிகளை பார்த்த போது, வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து திருடி விட்டு, அருகே பள்ளி மேற்கூரை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் கமிட்டியினர் தேவாலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலில் திருடிய ஏலமன்னா பெருங்கரை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 19) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்