search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் காயம்
    X

    கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் காயம்

    • கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் மாதேஷ் கண்ணன் (வயது7)
    • நேற்று மாதேஷ் கண்ணன், சகோதரருடன் ஆட்டோவில் கயத்தாறு வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.


    கயத்தாறு:


    கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் மாதேஷ் கண்ணன் (வயது7). இவன் தென்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.


    இந்நிலையில் நேற்று மாதேஷ் கண்ணன், சகோதரருடன் ஆட்டோவில் கயத்தாறு வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை அகிலாண்டபுரத்தை சேர்ந்த மாதவன் (31) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது ஆடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த மாதேஷ் கண்ணன் பலத்தகாயமடைந்தனர்.அவரை மீட்டு நெல்லைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கயத்தாறு சப்-இனஸ்பெக்டர் பால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    Next Story
    ×