search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் - கணவன்-மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு
    X

    மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் - கணவன்-மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு

    • மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
    • சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பால சுப்பிரமணியனுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இதையடுத்து இசக்கி சர்வேயர் மூலம் இடத்தை அளந்து வேலி அமைத்துள்ளார். சம்பவத் தன்று பாலசுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில் அவரது மனைவி பார்வதி மற்றும் 3 பேர் சேர்ந்து இசக்கி அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தினர். இதைப்பார்த்த இசக்கி தட்டிக் கேட்டார்.

    இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பார்வதி உள்பட 5 பேரும் சேர்ந்து இசக்கியை செங்கல்களாலும், கம்பாலும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதுகுறித்து மூலைக் கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக பாலசுப்பிர மணியன், அவரது மனைவி பார்வதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×