என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்- வாலிபர் கைது
- பிரவின் ஜெயபால் மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி மதியழகனுடன் தகராறு செய்துள்ளார்.
- காயம் அடைந்த மதியழகன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வீ.கே. நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜான் மகன் பிரவின் ஜெயபால் (23). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் அவர் மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி மதியழகனுடன் தகராறு செய்துள்ளார்.
இதனை மதியழகன் கண்டித்ததால் அவர்களு க்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. நேற்று மதியழகன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயபால் அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த மதியழகன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி ஜெய பாலை கைது செய்தனர்.
Next Story






