என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே இளம்பெண் விஷம் குடித்ததால் கள்ளக்காதலன் மீது தாக்குதல்
    X

    பொள்ளாச்சி அருகே இளம்பெண் விஷம் குடித்ததால் கள்ளக்காதலன் மீது தாக்குதல்

    • தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனின் மனைவிக்கு தெரிய வரவே அவர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணிகண்டன் மனைவி அவரை பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனையடுத்து மணி கண்டன் கள்ளக்காதலி வீட்டில் திருமணம் செய்யா மல் அவருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கள்ளக்காத லர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் மணிகண்டனுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மணிக ண்டன் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று கள்ளக்காதலி மற்றும் அவரது மகள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசினார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த இளம்பெண் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மணிகண்டனை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஷம் குடித்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அவரது உறவினர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×