search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு திட்டப்பணிகளை  சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
    X

    அரசு திட்டப்பணிகளை  சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

    அரசு திட்டப்பணிகளை சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு

    • அரசுதுறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
    • கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து சில நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய பொதுக்கணக்கு குழுவினர் கூறியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் தொகுதி சுதர்சனம் ,திருத்துறைப்பூண்டி மாரிமுத்து , வீரபாண்டி ராஜமுத்து ஆகியோருடன் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத் மற்றும் அரசுதுறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் , பேருந்து நிலைய கட்டிட பணிகள் , புதிய மருத்துவகல்லூரி பணிகள் உட்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக ஆய்வு செய்கிறோம் .

    மேலும் கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து சில நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய பொதுக்கணக்கு குழுவினர் கூறியுள்ளதாகவும் , அதன் அடிப்படையில் ஆய்வு நடைபெறுவதாகவும் கூறினார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் , பொதுக்கணக்கு குழு என்ன பரிந்துரை செய்தார்கள் என்பதையும் மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முழுமையாக தெரி விக்கப்படும் என்றார்.

    Next Story
    ×