என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல்
    X

    கடலூர் அருகே வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல்

    • சம்பவத்தன்று கூத்தப்பாக்கத்தில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
    • வீட்டில் அடைத்து வைத்திருந்த சுமதி மற்றும் அவருடன் இருந்த பெண்களை மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வீட்டிற்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடலூர் அடுத்த காராமணிக் குப்பத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 50). இவர் சம்பவத்தன்று கூத்தப்பாக்கத்தில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுமதி மற்றும் அவருடன் இருந்த 3 பெண்களையும், ராணி மற்றும் சேகர் தாக்கி வீட்டுக்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி மற்றும் அவருடன் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் அடைத்து வைத்திருந்த சுமதி மற்றும் அவருடன் இருந்த பெண்களை மீட்டனர். இதில் காயம் அடைந்த சுமதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் ராணி, சேகர் ஆகியோர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து தாக்கிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×