என் மலர்
அரியலூர்
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய கோரி மனு அளித்தனர்.
அரியலூர் :
அரியலூர் நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் துரை அருணன் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்தக் கோரிக்கை மனுவில்தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான சொத்துவரி உயர்த்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, மாநில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் போது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் நிபந்தனைகள் எதுவும் விதிக்க கூடாது.
ஆனால், தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளும், அதற்கேற்ப மாநில அரசின் அரசாணையும் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்துவிட்டது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
நெடுங்காலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானிக்கப்படும் சொத்துவரியை, உள்ளாட்சி அமைப்புகள் தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற நகரங்களில் இருக்க கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்க கூடிய மதிப்பும், வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது.
வளர்ந்த பகுதிகளுக்கும், வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
அரியலூர் நகரில் 70 சதவீதம் ஏழை நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வீட்டு வரி உயர்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. அதேபோல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது.
எனவே தாங்கள் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் துரை அருணன் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்தக் கோரிக்கை மனுவில்தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான சொத்துவரி உயர்த்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, மாநில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் போது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் நிபந்தனைகள் எதுவும் விதிக்க கூடாது.
ஆனால், தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளும், அதற்கேற்ப மாநில அரசின் அரசாணையும் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்துவிட்டது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
நெடுங்காலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானிக்கப்படும் சொத்துவரியை, உள்ளாட்சி அமைப்புகள் தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற நகரங்களில் இருக்க கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளினுடைய சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்க கூடிய மதிப்பும், வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது.
வளர்ந்த பகுதிகளுக்கும், வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் ஒப்பீடு செய்யவே முடியாது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
அரியலூர் நகரில் 70 சதவீதம் ஏழை நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வீட்டு வரி உயர்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. அதேபோல ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது.
எனவே தாங்கள் இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்துறை சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்த அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
செந்துறை கிராம ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த சமத்துவபுரத்தை சீரமைக்கவும், அவற்றின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதியதாக மயானம் அமைத்துத்தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சமத்துவபுரத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செயற் பொறியாளர் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்த அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
செந்துறை கிராம ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த சமத்துவபுரத்தை சீரமைக்கவும், அவற்றின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதியதாக மயானம் அமைத்துத்தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சமத்துவபுரத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செயற் பொறியாளர் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அம்பேத்கர் பிறந்த நாளைமுன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூரில் அமைந்துள்ள ஜி.கே.எம். நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் 131&வது பிறந்த நாளைமுன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் பல அரசியல்கட்சி சார்பில் நோட்டு, பேனா, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் எசனை கண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜெய்கனெஷ் வரவேற்றார். மாநில துணை செயலாளர்கள் அன்பானந்தம் மற்றும் கருப்புசாமி சிறப்பு அழைப்பாளர்களகா கலந்துகொண்டு மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினர்.
இதில் தொகுதி செயலாளர் மருதவாணன், ஊடக பிரிவு சதீஷ், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால், லட்சிய தி.மு.க. மாவட்ட செயலாளர் வினோத் ராஜ், மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் அஜித்குமார், சிபிஎம் தர்மராஜ் மற்றும் சிவன்ராஜ், ராஜீவ்காந்தி, அசோக், ராஜா சரண்ராஜ் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவில் பள்ளி தலைமையாசிரியர் லதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் சுஜாதா, ரேவதி, சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையம் திறக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கடைவீதியில் இருந்த காவல் நிலையம், பழுதடைந்ததால், திடீர் குப்பம் பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதையடுத்து, காவல்நிலைய புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
இதையடுத்து, அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலைய புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கடைவீதியில் இருந்த காவல் நிலையம், பழுதடைந்ததால், திடீர் குப்பம் பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதையடுத்து, காவல்நிலைய புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
இதையடுத்து, அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலைய புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.
சொத்துவரி உயர்வை கண்டித்து நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியா முன்னிலையில், மேலாளர் பொறுப்பு செந்தில் தீர்மானத்தை வாசித்தார்.
இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன், கண்ணன், ரேவதி, கலியமூர்த்தி, ராஜேந்திரன், மகாலட்சுமி, இன்பவல்லி, முகமது இஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி, ராணி ராஜேஷ், ஜீவா, புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி கூட்டத்தில் 20 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜேந்திரன், வெங்கடாஜலபதி, ஜீவா, முகமது இஸ்மாயில், இன்பவள்ளி, மகாலட்சுமி, ம.தி.மு.க. மலர்கொடி ஆகியோர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளி நடப்பு செய்தனர். பின்னர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியா முன்னிலையில், மேலாளர் பொறுப்பு செந்தில் தீர்மானத்தை வாசித்தார்.
இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன், கண்ணன், ரேவதி, கலியமூர்த்தி, ராஜேந்திரன், மகாலட்சுமி, இன்பவல்லி, முகமது இஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி, ராணி ராஜேஷ், ஜீவா, புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி கூட்டத்தில் 20 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜேந்திரன், வெங்கடாஜலபதி, ஜீவா, முகமது இஸ்மாயில், இன்பவள்ளி, மகாலட்சுமி, ம.தி.மு.க. மலர்கொடி ஆகியோர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளி நடப்பு செய்தனர். பின்னர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 350 வழக்குகள் சமரச மையத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீதிமன்றங்களிலிருந்து அனுப்பப்பட்ட 350 வழக்குகள் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலெட்சுமி தெரிவித்தார்.
தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் 17& வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி அரியலூர் ஆட்சியார் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலெட்சுமி தலைமை வகித்துப் பேசுகையில், இதன் சிறப்பு அம்சமாக நீதிமன்றங்களில் வழக்கு தொடராமலேயே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் மனு கொடுத்து (குற்றவியல் வழக்கு தவிர) சமரச மையத்தை நாடலாம்.
மேலும், கடந்த 9.04.2005-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவால், சமரச மையம் தொடங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த 9.4.2018-இல் சமரச மையம் தொடங்கப்பட்டு இதுநாள் வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலிருந்து 350 வழக்குகள் சமரச மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
முக்கியமாகப் பிரிந்த 2 குடும்பங்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சேர்த்து வைக்கப்பட்டு, இன்று 2 குடும்பங்களும் குழந்தைகளுடன் வந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர் என்றார்.
துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி, மாவட்ட குடும்பநல நீதிபதி செல்வம் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், அரியலூர்அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள், காவல் துறை, வருவாய்த் துறை, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீதிமன்றங்களிலிருந்து அனுப்பப்பட்ட 350 வழக்குகள் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலெட்சுமி தெரிவித்தார்.
தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் 17& வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி அரியலூர் ஆட்சியார் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலெட்சுமி தலைமை வகித்துப் பேசுகையில், இதன் சிறப்பு அம்சமாக நீதிமன்றங்களில் வழக்கு தொடராமலேயே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் மனு கொடுத்து (குற்றவியல் வழக்கு தவிர) சமரச மையத்தை நாடலாம்.
மேலும், கடந்த 9.04.2005-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவால், சமரச மையம் தொடங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த 9.4.2018-இல் சமரச மையம் தொடங்கப்பட்டு இதுநாள் வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலிருந்து 350 வழக்குகள் சமரச மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
முக்கியமாகப் பிரிந்த 2 குடும்பங்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சேர்த்து வைக்கப்பட்டு, இன்று 2 குடும்பங்களும் குழந்தைகளுடன் வந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர் என்றார்.
துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி, மாவட்ட குடும்பநல நீதிபதி செல்வம் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், அரியலூர்அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள், காவல் துறை, வருவாய்த் துறை, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை
அரியலூர் :
அரியலூர்,- பெரம்பலூர் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழே தண்டவாளத்தில், பலத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ரெயில்வே காவல் துறையினர் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அவர், அரியலூர் வாலாஜா நகரம், அண்ணா நகரைச் சேர்ந்த மருதமுத்து மகன் பூபாலன்(வயது34) என்பதும், ரெயில்வே கேட் அருகேயுள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்தி,
அப்பகுதியிலேயே போதையில் தண்டவாளம் அருகே மயங்கிக் கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஏதேனும் இரவுநேர ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்திருப்பார்களா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அரியலூர்,- பெரம்பலூர் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழே தண்டவாளத்தில், பலத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ரெயில்வே காவல் துறையினர் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அவர், அரியலூர் வாலாஜா நகரம், அண்ணா நகரைச் சேர்ந்த மருதமுத்து மகன் பூபாலன்(வயது34) என்பதும், ரெயில்வே கேட் அருகேயுள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்தி,
அப்பகுதியிலேயே போதையில் தண்டவாளம் அருகே மயங்கிக் கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஏதேனும் இரவுநேர ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்திருப்பார்களா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்குவதாக முதல் அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தேவைக்கேற்ப எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் மகாலட்சுமி, இணைச் செயலாளர் விஜயகுமாரி, பொருளாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சிபி ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஷர்மிளா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.
திருமானூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர் சங்க தலைவர் ராமராஜ் தொடங்கி வைத்தார். சூசை ராஜ் தலைமை வகித்தார். அனுசியா மற்றும் செல்வி முன்னிலை வகித்தனர். கவிதா வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியின் நிறைவாக ஜெயக்கொடி நன்றி கூறினார்.
ஆபாச வீடியோவை பகிர்ந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பொன்பரப்பி அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம்.
இவரது மகன் அஜித்குமார் வயது 23. இவர் இணைய தளத்தில் வந்த குழந்தைகளின் பாலியல் ரீதியாக எடுக்கப்பட்ட வீடியோவை முகநூல் பக்கத்தில் பலரும் பார்க்கும் வகையில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் முகநூல் நிறுவனம் மூலம் சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து சுமதி அஜீத்குமாரிடம் விசாரணை செய்தனர்.
இதனையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பொன்பரப்பி அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம்.
இவரது மகன் அஜித்குமார் வயது 23. இவர் இணைய தளத்தில் வந்த குழந்தைகளின் பாலியல் ரீதியாக எடுக்கப்பட்ட வீடியோவை முகநூல் பக்கத்தில் பலரும் பார்க்கும் வகையில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் முகநூல் நிறுவனம் மூலம் சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து சுமதி அஜீத்குமாரிடம் விசாரணை செய்தனர்.
இதனையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்-பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.-
இதனை தொடர்ந்து-- காவல் உதவி ஆய்வாளர் பிச்சைமணி மற்றும் போலீ-சார் அப்பகுதிக்கு சென்றனர். அப்-போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்-செல்ல முயற்சித்தனர்.
அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்த-போது கஞ்சா பொட்ட-லங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் கண்டியங்-குப்பம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பெனிட்டோ (வயது20),
அந்தோனியார்-புறம் பகுதியைச் சேர்ந்த அருண்-பிரேம் குமார் (21), ஜெயங்-கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (26), வரதராஜன்பேட்டை அந்தோனியார் புறம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (41) என தெரியவந்தது.
அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டல-ங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பெனிட்டோ, அருண்பிரேம் குமார், வினோத், ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்-பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.-
இதனை தொடர்ந்து-- காவல் உதவி ஆய்வாளர் பிச்சைமணி மற்றும் போலீ-சார் அப்பகுதிக்கு சென்றனர். அப்-போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்-செல்ல முயற்சித்தனர்.
அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்த-போது கஞ்சா பொட்ட-லங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் கண்டியங்-குப்பம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பெனிட்டோ (வயது20),
அந்தோனியார்-புறம் பகுதியைச் சேர்ந்த அருண்-பிரேம் குமார் (21), ஜெயங்-கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (26), வரதராஜன்பேட்டை அந்தோனியார் புறம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (41) என தெரியவந்தது.
அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டல-ங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பெனிட்டோ, அருண்பிரேம் குமார், வினோத், ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்-கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், செந்துறை வட்டம், கழுமங்களம் கிராமத்தில் தீவிபத்தினால் உயிரிழந்த ராணி என்பவரின் வாரிசுதாரர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000-க்கான காசோலையினையும், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022&ம் நிதி ஆண்டில் மது அருந்துவது மற்றும்
அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது-மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இணையவழி வாயிலாக ஓவியப்-போட்டி, கவிதைப்போட்டி, விழிப்புணர்வு வாசக போட்டி மற்றம் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் உரிய அறிவுறுத்தலின்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தி பல்வேறு போட்டிகள் வெற்றிப் பெற்ற 65 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
அனைத்து தேவாலயங்களில் குத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதாராசன்பேட்டை முக்கிய வீதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியாவாறே ஓசான்னா கீதத்தை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி பங்கு தந்தை பெலிக்ஸ்சாமுவேல் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
அரியலூரிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்வதர்கள் கலந்து கொண்டனர்.
தென்னூர் அன்னை லூர்து ஆலயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயத்திலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, குருத்தோலை பவன நிகழ்ச்சி நடைபெற்றன. ஏலாக்குறிச்சியிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. ஏலாக்குறிச்சி பேருந்து நிலையத்தில் திரண்ட கிறிஸ்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக குருத்தோலைகளை கையில் ஏந்திக் கொண்டு புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதே போல் திருமானூர் புனித அருளானந்தார் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்களமாத ஆலயம், குலமாணிக்கம், கோக்குடி கிராமங்களிலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயம் மற்றும் ஆண்டிமடம், செந்துறை, மீன்சுருட்டி உள்ளிட்ட தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதாராசன்பேட்டை முக்கிய வீதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியாவாறே ஓசான்னா கீதத்தை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி பங்கு தந்தை பெலிக்ஸ்சாமுவேல் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
அரியலூரிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்வதர்கள் கலந்து கொண்டனர்.
தென்னூர் அன்னை லூர்து ஆலயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயத்திலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, குருத்தோலை பவன நிகழ்ச்சி நடைபெற்றன. ஏலாக்குறிச்சியிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. ஏலாக்குறிச்சி பேருந்து நிலையத்தில் திரண்ட கிறிஸ்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக குருத்தோலைகளை கையில் ஏந்திக் கொண்டு புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதே போல் திருமானூர் புனித அருளானந்தார் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்களமாத ஆலயம், குலமாணிக்கம், கோக்குடி கிராமங்களிலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயம் மற்றும் ஆண்டிமடம், செந்துறை, மீன்சுருட்டி உள்ளிட்ட தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.






