என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் நியமனம்-மாநகரத்துக்கும் புதிதாக அறிவிப்பு
- மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.
- மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக கோமதி என்பவர் இருந்து வந்தார். சமீபத்தில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வர்களின் பற்களை உடைத்ததாக எழுந்த புகாரையடுத்து போலீசார் இடமாற்றம் செய்ய ப்பட்டனர்.
அதில் இன்ஸ்பெக்டர் கோமதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் மாவட்ட உளவுத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கியூ பிரிவில் பணியாற்றி யவர். திண்டுக்கல்லில் பணியாற்றி வந்த இவர் தற்போது மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்