search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் நியமனம்-மாநகரத்துக்கும் புதிதாக அறிவிப்பு
    X

    நெல்லையில் மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் நியமனம்-மாநகரத்துக்கும் புதிதாக அறிவிப்பு

    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.
    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக கோமதி என்பவர் இருந்து வந்தார். சமீபத்தில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வர்களின் பற்களை உடைத்ததாக எழுந்த புகாரையடுத்து போலீசார் இடமாற்றம் செய்ய ப்பட்டனர்.

    அதில் இன்ஸ்பெக்டர் கோமதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் மாவட்ட உளவுத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கியூ பிரிவில் பணியாற்றி யவர். திண்டுக்கல்லில் பணியாற்றி வந்த இவர் தற்போது மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×