என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை சிங்காநல்லூரில் மேலும் ஒரு கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி
    X

    கோவை சிங்காநல்லூரில் மேலும் ஒரு கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி

    • மேலாளர் மனைவியின் வங்கி கணக்கில் பணம் செலுத்திய 3 ஊழியர்கள்
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் திருச்சி ரோடு அய்யர் லே-அவுட் அருகே கிரைண்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

    இங்கு கோவையை சேர்ந்த சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில், இவர்கள் 4 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தை நிறுவன கணக்கில் கட்டாமல், மேலாளர் சக்திவேல் மனைவி அகிலாண்டேஸ்வரியின் வங்கி கணக்கில் செலுத்தினர்.

    மொத்தம் அவர்கள் 5 பேரும் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தெரியவந்தது. உரிமையாளர் குமார் அவர்களிடம் பணம் கேட்டு போது அவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    இது குறித்து குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம் பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் நிறுவன மேலாளர் சக்திவேல், அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி, ஊழியர்கள் ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், குமாரின் தந்தை முத்துசாமி நடத்தி வரும் கிரைண்டர் கம்பெனி யிலும் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக ஏற்கனவே 4 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×