search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 2026-ல் தொடங்கும்: அண்ணாமலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 2026-ல் தொடங்கும்: அண்ணாமலை

    • கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வந்துள்ளது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம்.
    • தமிழக பா.ஜனதா சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வந்தார். அடை யார் நட்சத்திர ஓட்டலில் அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வந்துள்ளது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

    15 மாநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. 700 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    2026-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கும். புதிதாக 7 ஐ.ஐ.டி.க்கள், 7 ஐ.ஐ.எம்.கள் தொடங்கப்பட்டு உள்ளது. 393 பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டு உள்ளது. வேளாண்மைத்துறைக்கும் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளோம். மூட்டையில் வாங்கப்பட்ட யூரியா உரம் இப்போது பாட்டில் அளவில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பா.ஜனதா சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறை வாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடு தோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×