search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
    X

    நாகையில், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

    • அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
    • கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத் தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்க ளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் 500க்கும் மேற்ப ட்டோர் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடை பெற்று வருகிறது.

    Next Story
    ×