search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை காலத்திற்கு முன்பு அனைத்து குளங்களையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும்-உடன்குடி விவசாயிகள் கோரிக்கை
    X

    தண்ணீர் இல்லாத அய்யனார் குளம்.


    மழை காலத்திற்கு முன்பு அனைத்து குளங்களையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும்-உடன்குடி விவசாயிகள் கோரிக்கை

    • மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது.
    • தண்ணீர் வரும் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.

    உடன்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச் சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உடன்குடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையனேரிகுளம், தாங்கை குளம், தருவைகுளம் மற்றும் ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை மழை காலங்களுக்கு முன்பு முழுமையாக பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

    இவைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் பராமரிப்பு செய்ய வேண்டும். இங்கே எடுக்கப் படும் மணலை கரையில் வைத்து கரையை உயர்த்த வேண்டும். அங்குள்ள மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது. இப்பகுதியில் உள்ள மண் வளம் மற்றும் மணல் பாதுகாக்க பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×