search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமாகி 3½ வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தீக்குளித்து பலி- தந்தை போலீசில் புகார்
    X

    திருமணமாகி 3½ வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தீக்குளித்து பலி- தந்தை போலீசில் புகார்

    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கோப்பகரையை அடுத்த கக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது44). இவரது மகள் முத்துலட்சுமி (23). இவருக்கும், கக்கதாசம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி முத்துலட்சுமி திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால், வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து முத்துலட்சுமியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தை பூங்காவனம் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3½ வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×