search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடி அமாவாசை வழிபாடு
    X

    பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடி அமாவாசை வழிபாடு

    • காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.

    பேரூர்,

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, பேரூர் நொய்யல் படித்துறையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடு த்து வழிபாடு செய்தனர்.

    பக்தர்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்களின் பெயரைச் சொல்லி, எள், உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனமுருகி வழிபட்டனர். மேலும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரிசி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

    ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் படையல் இட்டும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். குறிப்பாக இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வருகின்ற 2-வது அமாவாசையாகும்.கடந்த அமாவாசையோடு ஒப்பிடும்போது, இந்த அமாவாசைக்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை மாவட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். நொய்யல் ஆற்றில் நீர் வராததால், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக பைப் நீர் குழாய்களை அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் தர்ப்பண வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொடுக்கும் தர்ப்பண இலைகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் வகையில் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×