என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடையில் பலரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
- டேவிட் நான் பேசி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தகளை தெரிவித்தார்.
- டேவிட்டை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்தவர் கவுதமன்(வயது41).
இவர் கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி ஒயில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது.
அதன்படி அவருக்கு, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதமும் வந்தது. இதையடுத்து கவுதமன் தனது மாமனாரை சந்தித்து தனக்கு வந்த கடிதம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், மருமகனுக்கு வேலை கிடைப்பதற்காக தனக்கு தெரிந்த டேவிட் என்ற கணேசனிடம் அழைத்து சென்று விவரத்தை தெரிவித்தார்.
அதற்கு அந்த நபரும், எனக்கு நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரிகளை தெரியும். நான் பேசி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தகளை தெரிவித்தார்.
மேலும் இதற்கு சில, பல லட்சங்கள் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கவுதமன், டேவிட் கேட்ட ரூ.4 லட்சத்தை கொடுத்தார்.
அதன்பின்னர் 2 வாரங்கள் கழித்து டேவிட், கவுதமனை சந்தித்து, சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கையெழுத்திட்ட பணி நியமனத்திற்கான ஆணையை கவுதமனிடம் வழங்கினார். அவரும் உண்மையிலேயே வேலை கிடைத்து விட்டது என நினைத்தார்.
பணி ஆணையை எடுத்து கொண்டு கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கவுதமன் கேட்ட போது, அது போலியானது என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபரை பற்றி விசாரித்த போது தான் அவர், கவுதமனின் தங்கை கணவரிடமும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரும் தங்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து 2 பேரும் காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதி வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டேவிட் இதுபோன்று பலரி டம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் டேவிட்டை தேடி வந்தனர். இந்த நிலையில் துடியலூர் பகுதியில் டேவிட் வசிப்பதாக தகவல் வரவே அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்தவர் கவுதமன்(வயது41).
இவர் கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி ஒயில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது.
அதன்படி அவருக்கு, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதமும் வந்தது. இதையடுத்து கவுதமன் தனது மாமனாரை சந்தித்து தனக்கு வந்த கடிதம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், மருமகனுக்கு வேலை கிடைப்பதற்காக தனக்கு தெரிந்த டேவிட் என்ற கணேசனிடம் அழைத்து சென்று விவரத்தை தெரிவித்தார்.
அதற்கு அந்த நபரும், எனக்கு நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரிகளை தெரியும். நான் பேசி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தகளை தெரிவித்தார்.
மேலும் இதற்கு சில, பல லட்சங்கள் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கவுதமன், டேவிட் கேட்ட ரூ.4 லட்சத்தை கொடுத்தார்.
அதன்பின்னர் 2 வாரங்கள் கழித்து டேவிட், கவுதமனை சந்தித்து, சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கையெழுத்திட்ட பணி நியமனத்திற்கான ஆணையை கவுதமனிடம் வழங்கினார். அவரும் உண்மையிலேயே வேலை கிடைத்து விட்டது என நினைத்தார்.
பணி ஆணையை எடுத்து கொண்டு கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கவுதமன் கேட்ட போது, அது போலியானது என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபரை பற்றி விசாரித்த போது தான் அவர், கவுதமனின் தங்கை கணவரிடமும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரும் தங்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து 2 பேரும் காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதி வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டேவிட் இதுபோன்று பலரி டம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் டேவிட்டை தேடி வந்தனர். இந்த நிலையில் துடியலூர் பகுதியில் டேவிட் வசிப்பதாக தகவல் வரவே அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.






