என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கோவையில் வசித்த இளம்பெண்
    X

    வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கோவையில் வசித்த இளம்பெண்

    • இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
    • போலீசார் மீட்டபோது கணவருடனே வசிப்பதாக தெரிவித்தார்.

    கோவை,

    தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவர் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இவர் செல்போனில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

    சமூக வலைதள பக்கங்க ளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் கணக்கு தொடங்கி அதில் தனது நேரத்தை செல விட்டதாக தெரிகிறது.

    அப்போது அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விக்ரமன் என்ற நபர் அறிமுகம் ஆனார். 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர். முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண்ணின் தாயும், சகோதரரும் வேலை விஷயமாக வெளியில் சென்று விட்டனர். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மாலையில், வீட்டிற்கு வந்த போது, இளம்பெண் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சியான இளம் பெண்ணின் தாயார் அக்கம்பக்கத்தினர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் இளம்பெண்ணை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இளம்பெண் ணின் தாய் சம்பவம் குறித்து, ஏரல் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில், இளம் பெண், தனது காதலரான விக்ரமன் என்பவரை பழனி கோவி லில் வைத்து திருமணம் செய்து கொண்டு, கோவை மாவட்டம் நெகமம் சின்னேரிபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருவது தெரியவந்தது.இதையடுத்து ஏரல் போலீ சார் கோவைக்கு விரைந்து வந்தனர். பின்னர் நெகமம் அருகே கணவ ருடன் தங்கி இருந்த இளம்பெண்ணை யும், அவரது கணவரையும் தூத்துக்குடி ஏரல் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக் காக அழைத்து சென்றனர்.

    அங்கு இளம்பெண்ணின் தாயையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் தனது கணவருடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இளம் பெண்ணை அவரது கணவ ருடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×