என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
- மாணிக்கம் தினசரி போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
- செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவை தெலுங்கு பாளையம் புதூரை சேர்ந்த வர் மாணிக்கம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் மனைவி குழந்தைகளை பிரித்து கடந்த 18 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தினசரி போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் அவர் திரும்ப வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மாணிக்கத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செல்வ புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டிற்குள் மாணிக்கம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்