என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
- மாணிக்கம் தினசரி போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
- செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவை தெலுங்கு பாளையம் புதூரை சேர்ந்த வர் மாணிக்கம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் மனைவி குழந்தைகளை பிரித்து கடந்த 18 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தினசரி போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் அவர் திரும்ப வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மாணிக்கத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செல்வ புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டிற்குள் மாணிக்கம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






