search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே வாலிபர் தூக்கு போட்டு சாவு
    X

    கோவை அருகே வாலிபர் தூக்கு போட்டு சாவு

    • தீராத உடல்உபாதையால் அவதி
    • வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை

    கோவை,

    கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). சி.என்.சி. ஆபரேட்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    வினோத்குமாருக்கு 2 முறை குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவருக்கு வலி அதிகமாக காணப்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத்குமார் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ்அப் மூலமாக அவரது அக்காவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் நான் இருக்க மாட்டேன். வலி அதிகமாக உள்ளது. எனது குடும்பத்தை பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் அனுப்பி இருந்தார்.

    பின்னர் வினோத்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×