search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கல்லூரி கழிவறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
    X

    கோவையில் கல்லூரி கழிவறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி

    • விரும்பிய படிப்பை படிக்க முடியாததால் வேதனை
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா(வயது17).

    இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ரம்யா விவசாயம் தொடர்பான படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவரை அவரது பெற்றோர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து விட்டனர்.

    இதன் காரணமாக ரம்யா கடந்த சில நாட்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து எலி மருந்தை சாப்பிட்டார்.

    பின்னர் வகுப்பறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த பேராசிரியர்கள் உடனடியாக ரம்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் ரம்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×