search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் தூங்குவது போல் நடித்து பயணியிடம் திருடிய மர்ம நபர்
    X

    மேட்டுப்பாளையத்தில் தூங்குவது போல் நடித்து பயணியிடம் திருடிய மர்ம நபர்

    • பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்குகின்றனர்.
    • பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் டீ குடிப்பது போல் அமர்ந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் தென் மாவட்ட மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

    அப்படி வரும் பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கவும் செய்கின்றனர். அப்படி வந்த பயணி ஒருவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய த்தில் நடை மேடையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர மர்மநபர் ஒருவர் ஏற்கனவே படுத்து உறங்கி கொண்டு இருந்த பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் அமர்ந்து டீ குடிப்பது போல் அமர்ந்து பின்னர் அங்கேயே தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்தார்.

    சற்று நேரத்தில் பயணி நன்கு ஆழ்ந்த தூங்கிவிட அருகில் இருந்த மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை எடுத்து தனது சட்டை பையில் வைத்து கொண்டு மீண்டும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    வீடியோ பரவுகிறது

    பின்னர் காலையில் எழுந்து பார்த்த அந்த பயணி பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் படுத்து இருந்த இடத்தின் அருகே இருந்த கடையில் சி. சி. டி. வி காமிராவினை ஆய்வு செய்த போது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்தை இழந்த அந்த நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை .தற்போது சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×