என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி வாலிபரிடம் கத்திமுனையில் கொள்ளை- மர்ம கும்பல் துணிகரம்
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கத்தியை காட்டி வின்சென்டை மிரட்டினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் பிரட்ரிச் வின்சென்ட் (வயது23).
இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கால்டாக்சி மூலம் வளசரவாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதிக்கு வந்த வின்சென்ட் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கத்தியை காட்டி வின்சென்டை மிரட்டினர். மேலும் அவர் வைத்து இருந்த 2 பெரிய பைகளை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அதில் "லேப்டாப்" உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.
இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வின்சென்ட் இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






