search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ள முயன்றவர் கைது
    X

    இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ள முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

    தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ள முயன்றவர் கைது

    • கோட்டை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரம்.
    • தடையை மீறி பிரசார பயணம் மேற்கொள்ளக் கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்து மக்கள் கட்சி சார்பில் வருகிற 29ஆம் தேதி கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொள்கிறார்.

    இந்த மாநாடு வெற்றி பெறுவதற்காகவும், வலு சேர்ப்பதற்காகவும் கோட்டை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி முடிவு செய்தார்.

    அதன்படி அவர் இன்று தஞ்சை பெரிய கோவில் முன்பு சோழன் சிலை அருகே இருந்து தனது இருசக்கர வாகன பிரசார பயணத்தை தொடங்க முயன்றார். இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தடையை மீறி பிரசார பயணம் மேற்கொள்ளக் கூடாது என கூறி கார்த்தியை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×