search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த ஓடும் பஸ்சில் இறந்த சலவைத் தொழிலாளி
    X

    திருச்சூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த ஓடும் பஸ்சில் இறந்த சலவைத் தொழிலாளி

    • பஸ் கண்டக்டர் அபுபக்கர் சித்திக் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்பினார்.
    • போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    கோவை,

    மதுரை அருகே உள்ள ஏழுமலையை சேர்ந்தவர் பெரியசாமி என்ற முருகன் (வயது 50). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் சலவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

    பெரியசாமி சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார். இதற்காக அவர் திருச்சூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கேரள மாநில அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த போது பெரியசாமி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    பஸ் பொள்ளாச்சி பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். ஆனால் பெரி யசாமி மட்டும் இறங்காமல் இருந்தார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் அபுபக்கர் சித்திக் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்பினார்.

    ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அவர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×