என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவி கவுரவிக்கப்பட்டார்.
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
- திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ராஜன்கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அகோரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தனபால் முன்னிலை வகித்தார்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்தனர்.
திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற 6 மாணவர்களை பரிசு வழங்கி கவுரவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.






