என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் மீனவரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
- மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது.
- இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சேர்ந்தவர் மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பூவராகவன், ராமதாஸ் ஆகியோர் மோகனை வழிமறித்து இரும்பு கம்பி யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் முது நகர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






