என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே முன்விரோத தகராறில் 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
- விஜயன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
- மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள்.
கடலூர்:
கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவ ருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத் தன்று மாதேஷ் வீட்டிற்கு விஜயன் உட்பட 5 பேர் நேரில் சென்று சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அதனை தடுக்க வந்த அவரது தாய் சந்திராவை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள். இதில் காயமடைந்த மாதேஷ், செந்தில்வேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற னர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்வேல், நடராஜன், கலை, சரவணன், விஜயன் ஆகிய 5 பேரும், செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், குமரன், சந்திரா என மொத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்