என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நடுரோட்டில் கவிழ்ந்த கார்- வாலிபர் காயம்
    X

    கோவையில் நடுரோட்டில் கவிழ்ந்த கார்- வாலிபர் காயம்

    • முத்தண்ணகுளம் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • பொதுமக்கள் சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கோவை,

    கோவை உக்கடம்-சுங்கம் ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதியாகும். நேற்று நள்ளிரவு நேரத்தில் உக்கடம்-சுங்கம் ரோட்டில் சுங்கத்தை நோக்கி ஒரு கார் வந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் கார் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது.

    முத்தண்ணகுளம் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் கார் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி சேதம் அடைந்தது. காருக்குள் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மயங்கி விட்டார்.

    உடனடியாக பொதுமக்கள் சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கோவை திருநகர், லேஅவுட்டை சேர்ந்த கவுதம்(வயது29) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×