என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் இன்று ரெயில் முன் பாய்ந்து தொழில் அதிபர் தற்கொலை
- சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
- இந்நிலையில் இன்று கோவில்பட்டி- மணியாச்சி இடையே ரெயில் முன் பாய்ந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அண்ணாநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது48). இவர் வெளிநாட்டில் கார்மெண்ட்ஸ் தொழில் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு சொந்த ஊர் வந்தார். இவரது மனைவி முருகலட்சுமி. இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தான் தற்கொலை செய்ய போவதாக அவ்வப்போது கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி- மணியாச்சி இடையே ரெயில் முன் பாய்ந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற தூத்துக்குடி இருப்பு பாதை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்