search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கல்லூரி பெண் ஊழியரிடம் 5 பவுன் செயின் பறிப்பு
    X

    கோவையில் கல்லூரி பெண் ஊழியரிடம் 5 பவுன் செயின் பறிப்பு

    • ஜமுனா கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை கவுண்டம்பாளையம் டிவி. எஸ் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி ஜமுனா (வயது 55). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார்.

    அப்போது கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார். இந்த நேரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் ஜமுனாவிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.இந்த நிலையில் ஜமுனா கல்லூரிக்கு வந்தார்.

    அப்போது அவரிடம் சக ஊழியர்கள், ஏன் செயின் அணிந்து வர வில்லை என்று கேட்டு உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனா கழுத்தில் தொட்டு பார்த்தார். அப்போது தான் அணிந்திருந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×