search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிப்பாளையம் அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு
    X

    செட்டிப்பாளையம் அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு

    • கீழே விழுந்ததில் படுகாயத்துடன் பெண் படுகாயம்
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள கம்பர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்குமார்.

    இவரது மனைவி ஜெயஸ்ரீ(வயது25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் மலுமச்சம்பட்டிக்கு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ஜெயஸ்ரீ கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    அப்போது இளம்பெண் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஜெஸ்ரீயை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×