என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை 2 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது
- திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
- போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோட்டூர் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு தேவராயபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்றார்.
அப்போது மாணவியை சந்தித்த சிறுவன் திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி அவரை சென்றாம்பா ளையம் அம்மன் நகரில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டு தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சிறுவனுடன் சென்றாம்பா ளையத்தில் உள்ள தோட்ட த்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து கோட்டூர் போலீசார் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்