என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூரியில் சமையல்காரர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
- மகேந்திரன் சம்பவத்தன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார்.
- சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா செட்டியார் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(35). சமையலர். இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பியதும் அவரது மனைவி தான் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை கழட்டி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்தார். ஆனால் அதன்பின்பு சில நாட்கள் கழித்து பார்த்தபோது அலமாரியின் லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே வைத்திருந்த 7 பவுன் தங்க நகையை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Next Story






