search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 600 கிராம் கஞ்சா பறிமுதல்- சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    கோவையில் 600 கிராம் கஞ்சா பறிமுதல்- சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக வாலிபர் சிக்கினார்
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அவன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து சுகுணாபுரம், சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ.110 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவர் இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×