search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பரை வெட்டி கொல்ல முயன்ற பெயிண்டர் உள்பட 4 பேர் கைது
    X

    நண்பரை வெட்டி கொல்ல முயன்ற பெயிண்டர் உள்பட 4 பேர் கைது

    • மனைவியை அபகரித்து குடித்தனம் நடத்தியதால் ஆத்திரம்
    • 2 அரிவாள் மற்றும் கார் பறிமுதல்

    கோவை,

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த வர் ஷெல்டன் (வயது 29). கூலித் தொழி லாளி. சந்தை பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). பெயிண்டர். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்ப ர்கள்.

    அடிதடி வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கார்த்திகேயன் ஜெயிலுக்கு சென்றார். அப்போது ஷெல்டனுக்கும் கார்த்திகேயனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    பின்னர் ஷெல்டன் கார்த்திகேயனின் மனைவி மற்றும் 2 பெண் குழந்தை களுடன் சரவணம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். தன்னு டைய மனைவியுடன் ஷெல்டன் குடும்பம் நடத்தி வருவதால் அவர் மீது கார்த்திகேயனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதன் கார ணமாக 2 பேரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஷெல்டன் அடிதடி வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு அவரது தம்பி நியூட்டனுடன் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கார்த்திகேயன் ஒரு காரில் நண்பர்களான விளாங்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (40), ஆவாரம்பா ளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி (32), கணபதியை சேர்ந்த பிரதாப் (29) ஆகியோருடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயு தங்களுடன் பின் தொ டர்ந்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் புதுப்பாளையம் சீதாவனம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் மோதி கீழே தள்ளினர். இதில் கீழே விழுந்த ஷெல்டனை வெட்டி கொலை செய்ய முயன்றார். அப்போது கும்பலிடம் இருந்து தப்பிய அவர் இதுகுறித்து தொ ண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஜெகன், சத்தியமூர்த்தி, பிரதாப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 2 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×