search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீளமேட்டில் வீடு புகுந்து வெண்கல பொருட்கள் திருட்டு-4 பேர் கைது
    X

    பீளமேட்டில் வீடு புகுந்து வெண்கல பொருட்கள் திருட்டு-4 பேர் கைது

    ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு கோபால் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(55). இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு நஞ்சப்பா ரோட்டில் உள்ளது.

    நஞ்சப்பா ரோட்டில் உள்ள வீட்டை லாவண்யா என்பவர் மாதத்தில் 2 முறை சென்று சுத்தம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று லாவண்யா வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உடனே லாவண்யா ராஜேஷ்வரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இது குறித்து ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி(22), வால்பாறையை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(31), கேரளா மலப்புரத்தை சேர்ந்த பூக்கயா(47), கோவை தடாகம் ரோடு வெங்கிடாபுரத்தை சேர்ந்த முருகன்(63) ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×