என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
- சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- பஸ்,ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
கோவை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திங்கள்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து நேற்று மாலை முதல் பஸ்கள், ரெயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதனால் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிக ளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை, தேனி, மார்க்கமாக செல்லும் பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்தும். கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும். ஈரோடு, சேலம், நாமக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும். ஊட்டி, கூடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த தற்காலிக பஸ் நிலையங்க ளுக்கு காந்திபுரம், உக்க டத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை முதல் மதுரைக்கு 100 பஸ்களும், திருச்சிக்கு 80, தேனிக்கு 50, சேலத்துக்கு 60 என மொத்தம் 290 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நேற்று மாலை முதல் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் பஸ்களின் இயக்கம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு பஸ்கள், ரெயில்கள், கார்கள் மற்றும் விமானம் மூலமாக 4 லட்சம் பேர் வரை சென்றது தெரிய வந்துள்ளது. இது அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இன்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்