என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே சிறுவன் கொலையில் 4 பேர் கைது
- ராமச்சந்திரன் (வயது 18). சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்
- இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராமச்சந்திரன் (வயது 18). சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலை செய்தார். இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சகோதரி கல்பனா 3 மாதங்களுக்குப் முன்பு இறந்து விட்டார். இவரது தாய் மணிமேகலை ஈரோட்டில் கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றார். இவரது பாட்டி பவுனம்பாம்பாள் (60) என்பவருடன் கொத்தனூரில் வசித்து வந்தார்.அ தே ஊரை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ் குற்றவழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் மோகன்ராஜிடம் பேச வேண்டாம் என்று இவரது பாட்டி சொல்லி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனை வெட்டி கொலை செய்தார்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொலை செய்த கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (21), ராமலிங்கம் மகன் கந்தசாமி (18) கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் மகன் வெற்றிவேல்(17), மடப்பட்டு கிராமத்தை சார்ந்த வடிவழகன் மகன் கஜேந்திரன் (19) ஆகிய 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






