search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
    X

    கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

    • போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
    • போலீசார் பிரசாந்திடமிருந்து இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை களிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆலந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுக்கரை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக முஸ்தப்பா (52), அபுதாகிர் (24) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×